இன்று ஊழலுக்கு எதிர்ப்பாக நடந்து கொண்டிருக்கும் மிக பெரிய போராட்டம் இந்திய மக்களை நிச்சயம் விழிப்படைய வைத்திருக்கிறது. ஊழலுக்கு எதிர்ப்பான இந்த விழிப்புணர்வு உலகளவில் ஒரு மாற்றத்தை தரும் என்று நான் நம்புகிறேன்..
ஒரு சாதாரணமான சாமானிய குடி மகனாக நான் என் உணர்வுகளை தெரிவிக்க இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி சிவானந்த காலனியில் நடக்கும் பேரணியில் பங்கேற்கிறேன்..
நான் வெறும் சிறு துளி தான்.. ஊழல் என்ற வியாதியை ஒட்டு மொத்தமாக அழித்துவிட துடிக்கும் என்னை போல் எத்தனையோ சிறு துளிகள் இன்று ஒன்று சேர்ந்து பெரும் கடலாக மாறியுள்ளது என் தாய் திரு நாட்டிற்க்கு நிச்சயம் நன்மையாய் முடியும்.
இதுவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், எனக்கு தோன்றிய சில கேள்விகளுக்கு யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....
1 . காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த ஒரு தமிழக கட்சியின் தலைவர் இன்று இந்தியர்களுக்காக நடக்கும் ஒரு உரிமை போராட்டதிற்கு மவுனம் சாதிப்பது ஏன்?
2 . மேற் சொன்ன அறபோராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்த ஒரு தொலைக்காட்சி கடந்த சில தினங்களாக நடக்கும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தையும் அதன் பின்னணியில் நடக்கும் அவலங்களையும் பெயரளவில் செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்டதேன்???
3 . இலங்கை தமிழர்களுக்காக பல விதத்தில் போராட்டம் மற்றும் கண்டன நடவடிக்கைகள் செய்த தமிழ் திரையுலகம் இன்று சென்றதெங்கே???
4 . விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை மேடை போட்டு கண்டித்த கட்சிகள் இன்று எங்கே???
5 . இலங்கை அரசின் அடக்குமுறைகளை கண்டித்து கதறி துடித்தவர்கள் இன்று இந்திய அரசின் செயல்களை கண்டு மௌனம் சாதிப்பது ஏன்???
இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நீங்கள் கண்டித்து வெகுண்டெழுந்த போது அதை கண்டு பெருமை கொண்ட இந்த தமிழன் இன்று ஒரு இந்தியனாய் நீங்கள் செத்துவிட்டதை எண்ணி மனம் குமுறுகிறேன்.
நதிநீர் இணைபிற்காக உண்ணாவிரதம் இருந்த என் அபிமானத்திற்கு உரியவர்களே.... அதைவிடவும் முக்கியமான ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் உங்களை காண முடியவில்லையே??? நீங்கள் திடீர் ஊமைகளாகிபோன ரகசியம் என்ன?????

