Friday, April 19, 2013

ஈஷா - அலை - கனலே கனலே

ஈஷாவின் அலை என்னை மிகவும் கவர்ந்தது, அதிலும் "கனலே கனலே" பாடல் மிகவும் அருமை... 


பாடல் வரிகள் இதோ உங்களுக்காக ....

உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
  உன்னை வைக்க தான் 
வெள்ளம் போல நீ  நுழைந்தாய்
  நானும் மூழ்க தான் (2)

கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
  கண்ணெதிர் வருகிற கனவே கனவே

                  ( உள்ளம் ஒன்று - 2)
                   (கள்ளங்கள் - 2) 
 
எத்தனை பிறவிகள் என்னை சுமந்தே
  எல்லா திசையிலும் நடந்தேன் நடந்தேன் (2)

எத்தனை தவங்கள் எப்படி செய்தேன்
  எவ்விதம் உன்னை அடைந்தேன் அடைந்தேன்

                      (கள்ளங்கள் - 1 ) 

மூச்சினில் கலந்தது உந்தன் கருணை
  பேச்சினில் வருவது உந்தன் கவிதை (2)

காட்சியில் தெரிவதும் , கணத்தினில் மறைவதும்
  கேட்டதை தருவதும் உந்தன் மகிமை

                        (கள்ளங்கள் - 2 ) 
                        ( உள்ளம் ஒன்று - 2) 

ஆசையின் முதுகில் ஆயிரம் காலம்
  ஆடி குலுங்கிய பயணம் பயணம் (2)

பாசத்தில் வழுக்கி, பள்ளத்தில் சறுக்கி
  போனது எத்தனை தூரம் தூரம்

பாதையின் முடிவில் உனது முகம்
  பார்த்ததும் தெளிந்தது எனது மனம் (2)

நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
  நிகழ்ந்ததில் துலைந்தது வினையின் கணம்
                                 
                         (கள்ளங்கள் - 1 ) 
                        ( உள்ளம் ஒன்று - 2) 
                        (கள்ளங்கள் - 2 )  

                                                                                                - முற்றும் .... 

பாடலை கேட்க இதோ...







Tuesday, March 26, 2013

உன் குத்தமா??? என் குத்தம்மா???

எனக்கு இதை எழுத ஆரம்பிக்கும் பொழுதே தெரியும் இந்த பதிவு சில எதிர்ப்புகளை சந்திக்கலாம் என்று... எனக்கு தெரிந்த உண்மையை சொல்லுவதில் தவறில்லையே??? எல்லோருக்கும் இருப்பதுபோல் எனக்கும் தனி மனித கருத்து உண்டு. அவை தான் இங்கே பதிவு செய்யபட்டிருக்கிறது. அதை தவிர யாரையும், யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.

சமீக காலமாய் பரவலாக அதிகம் பேசப்படும் செய்தி - இலங்கை ராணுவம் செய்த போர் குற்றங்களும் , தனி ஈழம் என்ற கோஷமும் தான்...

முதலில் போர் குற்றங்கள் பற்றிய என் கருத்தை மீண்டும் பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். நான் மீண்டும் என்று சொன்ன காரணம், என் கருத்து இன்றல்ல ஒரு வருடத்திற்கு முன்பே என் ஆங்கில பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது - http://vigramthinks.blogspot.in/2012/03/humanity-dead-or-alive.html

நான் பலமுறை சொன்னது போல் இந்த போர் குற்றம் மட்டும் இல்லை எல்லா போர் குற்றங்களுமே நிச்சயம் கண்டிக்க மட்டுமல்ல தண்டிக்க பட வேண்டியவை. இலங்கையில் நடைபெற்ற போர் குற்றத்திற்கு என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தனி ஈழம் பற்றி நிச்சயம் நான் கருத்து சொன்னால் அது தவறாக தான் இருக்கும். ஏனெனில் தனி ஈழம் கேட்டு போராட்டம் ஆரம்பித்த காரணம் எனக்கு நிச்சயம் முழுவதுமாக தெரியாது.

ஆனால்.... இந்த போராட்டங்களை பார்க்கும் பொழுது சில கேள்விகள் எனக்குள் தோன்றியது (அவைகளில் சில அடிப்படை அறிவு இல்லாத கேள்வியாக கூட இருக்கலாம் ) பதில் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

தயவு செய்து "தமிழன்" என்ற இன வட்டத்துக்கு வெளியே வந்து யோசித்து பதில் சொல்லவும். உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் பதில் எமக்கு தேவை இல்லை :) இன வெறியர்களுக்கும் இங்கே இடம் இல்லை. மனிதர்கள் மட்டும் pls ...

 1.  தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தியது யார்? உண்மை காரணம் என்ன???
2. இந்திய நாட்டில் தமிழன் தனி நாடு கேட்பதையே அனுமதிக்காத நாம் எவ்வாறு அடுத்த நாட்டில் கேட்பதை நியாய படுத்துகிறோம்?
3. இலங்கை முதலில் தமிழர்களால் ஆளப்பட்டது என்பது தவறான செய்தி. இலங்கையின் வரலாற்றை படித்து பாருங்கள் இது விளங்கும். தமிழன் போர் நடத்தி இலங்கையை சில காலங்கள் ஆண்டானே தவிர, இலங்கையின் முப்பாட்டன் தமிழன் இல்லை.
4. இப்பொழுது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் ஆங்கிலேயே ஆதிக்கத்தின் பொழுது தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய அடிமைகளாய் சென்றவர்களே.. (By the mid-19th century, Ceylon tea had become a staple of the British market bringing great wealth to a small number of white tea planters. The planters imported large numbers of Tamil workers as indentured labourers from south India to work the estates, who soon made up 10% of the island's population. These workers had to work in slave-like conditions living in line rooms, not very different from cattle sheds. Source : Wikipedia )
5. உண்மை இப்படி இருக்க, அதை திரித்து கூறி "தமிழன்" என்ற இன வெறியை விதைத்து இன்று தமிழ்நாட்டில் போராட்டத்தை தூண்டும் அரசியலுக்கு உண்மையில் பலியானது யார்????
6. சரி... தமிழுக்கும், தமிழர்க்கும் கலங்கும் கண்களை இத்தனை வருடங்கள் எங்கே வைத்திருந்தீர்??? இந்த போரும், போர் குற்றங்களும் நேற்று நடந்தவை இல்லையே??? பல வருடங்கள் நடந்துகொண்டுதானே இருக்கிறது... அப்பொழுது எங்கே போனீர்கள்????
7. இலங்கையில் இருந்து பல வருடங்களுக்கு முன் அகதிகளாய் தமிழகம் வந்த தமிழர்கள் இன்றும் அகதிகளாய் தானே இருகிறார்கள்... அவர்களுக்கு என்ன போராட்டம் செய்தீர்கள்?
8. தமிழனின் இன உணர்ச்சியை தூண்டி அதில் அரசியல் செய்யும் கேவலமான மனிதர்களின் தூண்டிலுக்கு சிக்கிய மீனாக என் சகோதரன் இருகிறானே என்று எண்ணி கவலை படுவதை தவிர வேறு என்ன நான் செய்ய???
 9. நம் நாட்டின் எல்லைக்குள் வேறு நாட்டவன் நுழைந்தால் நம் ராணுவம் என்ன செய்யுமோ அதை  தானே இலங்கை ராணுவமும் செய்தது?? அதிக மீன்களுக்கு ஆசை பட்டு கடல் எல்லையை மதிக்காதது யார் குற்றம்??? தமிழன் என்பதால் மட்டும் என் மக்கள் செய்வது அனைத்தும் நியாயம் ஆகிவிடுமா????
10. இலங்கையில் நடத்த போர் குற்றத்திற்காக போராட உனக்கு உரிமை இருப்பதாய் நீ கருதினால், உன் நாட்டின் ராணுவம் உன் நாட்டின் எல்லைக்குள் நடத்தும் போர் குற்றங்களை நீ கண்டிக்காதது ஏன்??? அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதாலா??? அப்படி என்றால் நீ முதலில் மனிதனே இல்லை பின் தமிழனை பற்றி பேச உனக்கென்ன அருகதை இருக்கிறது???
11. இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்படும் பெண்கள் உன் சகோதரிகள் இல்லையா??? கொல்ல பட்டவர்கள் உன் சகோதரர்கள் இல்லையா???

இலங்கை சென்று வந்த அணைத்து நாடு நிலையாளர்கள் சொல்லுவது ஒன்று தான் -

இலங்கையில் தமிழர்களின் புணர் வாழ்விற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பான்மை தமிழர்களும் நிம்மதி தெரிவித்து உள்ளார்கள். அவர்கள் பயபடுவதெல்லம் எங்கே தமிழ்நாட்டில் நடக்கும் போரட்டத்தால் அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படுமோ என்றுதான்.

நீங்கள் அடைய விரும்புவதும் அது தானே??

1. பன்னாட்டு சுதந்திர விசாரணை - விசாரணை நடக்கிறது என்று சீரமைப்பு பணிகளை இலங்கை நிறுத்தி விட்டால் நீங்களா போயி அவங்கள காப்பாத்துவிங்க??? இங்க போராட்டம் மட்டும் தான பண்ணுவிங்க???
2. தனி ஈழம் வேண்டும் - சரி... ஒரு பெயருக்கு நாளையே தனி ஈழம் தருகிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த தனி நாட்டிற்க்கு நீங்கள் என்ன திட்டம் வைத்திருகிறீர்கள்??? தனி நாடு என்பது என்ன சின்ன புள்ளைங்க வெளையாடுற பொம்மை விளையாட்டா???


இன்று இலங்கையில் தமிழர்களின் இந்த நிலைக்கு உங்கள் தனி ஈழ கொள்கையும், போராட்டமும் நிச்சயம் ஒரு காரணம். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை தனியாக கேட்டால் தமிழன் நானே அடிப்பேன். அப்படி தான அவங்களுக்கும் இருக்கும்??? இலங்கையில் தமிழனுக்கு தனி நாடு கேட்க நீ யாரு?? அப்படியே குடுத்தா நீ என்ன பண்ணுவ, பண்ண முடியும்???

அடுத்தவர்களின் அரசியல் லாபத்திற்காக பகடையாய் ஆவதை முதலில் உணருவாயா  தமிழா ???

பி.கு : இவை அனைத்தும் முழுவதுமாய் என் சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. தவறு இருப்பதாய் தெரிந்தால் திருத்தி கொள்ள நான் தயார்.

Monday, July 23, 2012

மாற்றம் வருமா??

இன்று எனது Yamaha RX 135 வண்டியின் இன்சூரன்ஸ் புதுபிக்க வேண்டிய வேலை இருந்ததால் காலை அதற்குத் தேவையான அனைத்து காகிதங்களுடன் நேராக இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றேன். நான் எதிர் கொண்ட, இன்னும் மாறாத வழக்கமான சம்பவங்களை இங்க தொகுத்துள்ளேன்...

முதலில் என் தவறுகள் இங்கே-
1. என்னுடைய பாலிசி முடிவு காலம் -  22/07/2012 நள்ளிரவு
2. ஞாயிறு நள்ளிரவு வரை அவகாசம் உள்ள என் பாலிசியை வெள்ளி காலையே புதுபிக்காதது (சனி, ஞாயிறு விடுமுறை ஆயிற்றே)
3. சரியான சில்லறை இல்லாமல் சென்றது.

இனி இதோ என்னுடைய பாலிசி புதுப்பித்த அனுபவம்-

10:00 மணி: 
இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு சென்ற பொழுது 4 அல்லது 5 பேரை பார்த்திருப்பேன். அவர்களில் ஒருவரிடம் சென்று நான் வந்த காரணத்தை சொன்ன போது நேராக கடிகாரத்தை பார்த்து விட்டு என்னிடம் சற்று காத்திருக்குமாறு சொன்னார்.

நான்: சார்.. என்னோட இன்சூரன்ஸ் பாலிசி எக்ஸ்பயரி ஆயிருச்சு, ரெநேவல் பண்ணனும்.
அதிகாரி(?): ஹ்ம்ம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
நான்: ஓகே சார்.

ஒரு 15 நிமிடங்கள் கழித்து அலுவகத்தில் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு (இந்நேரம் மொத்தம் 15 அலுவலர்கள் வந்திருப்பார்கள்)என்னை காத்திருக்க  சொன்னவரை காணாததால் முதல் மேஜையில் இருந்த ஒரு பெண் அலுவலரிடம் சென்று நான் வந்த காரணத்தை சொல்லி என் பாலிசி சம்பந்தப்பட்ட காகிதங்களை காட்டினேன்.. அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை போலும், நான் நீட்டிய காகிதங்கள் எதையுமே சட்டை செய்யாமல், எனக்கு வேறு ஒரு பெண் அலுவலரை காட்டி "அவங்கள போய்  பாருங்க" என்றார். நானும் "தேங்க்ஸ் மேடம்" என்று சொல்லிவிட்டு நேராக அவர் காட்டிய அலுவலரிடம் சென்றேன்.

அவரிடம் சென்று நான் பாலிசி புதுபிக்க வேண்டும் என்று கூறிய மறு நொடி-
அலுவலர்: அதுக்கு எதுக்கு என் கிட்ட வந்தீங்க
நான்: அந்த மேடம் தான் உங்களை பாக்க சொன்னாங்க
அலுவலர்: அப்படியா.. (நான் நீட்டிய என் பாலிசி காகிதங்களை பார்த்துக்கொண்டே) பாலிசி எக்ஸ்பயரி ஆய்ருச்சா...
நான்: ஆமாம்.. நேத்து தான் எக்ஸ்பயரி ஆச்சு மேடம்
அலுவலர்: Driving Licence இருக்கா? (எதற்கு கேட்டார் என்று தெரியவில்லை)
நான்:  இருக்குங்க (என் driving licence காண்பித்தேன்)
அலுவலர்: சரி.. இந்த form fill பண்ணுங்க
நான்: ஓகே மேடம்  

அவர் குடுத்த அந்த காகிதத்தில் கேட்டிருந்த அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அவரிடம் கொண்டு சென்று கொடுதேன். வாங்கி வைத்து கொண்டு "வண்டிய பாக்கணும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார். "சரிங்க" என்று சொல்லி விட்டு ஒரு நாற்காலியை தேடி போய் அமர்ந்தேன்..

ஒரு 15 நிமிடங்கள் கழித்து அந்த அலுவலர் "நீங்க போகலையா" என்றார். என்னிடம் தான் சொல்கிறார் என்பதை உறுதி படித்திக்கொண்டு "எங்கிங்க மேடம்" என்றேன். அவர் "சீக்கிரம் போங்க வண்டி பாக்க ஒருத்தர் போயிருக்கார்" என்றார். என் நன்றியை தெரிவித்துவிட்டு வேகமாக கீழே சென்றேன்.

அங்கே.. ஒருவரை சுற்றி ஒரு 5-6 பேர் காகிதங்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். நேராக அவரிடம் சென்று என்னுடைய பாலிசி காகிதங்களையும் நான் நிரப்பிய form யும் நீட்டினேன். அவர் என்னை பார்த்து "நீங்க நேரா என் கிட்ட வர வேண்டியது தான?" என்றார். நான் "எனக்கு தெரியாது சார்,
அவங்க தான் அந்த மேடம்ஐ பார்க்க சொன்னாங்க" என்றேன். "இனிமேல் என்ன வந்து பாருங்க.. சரியா?" என்றவரிடம், "சரி" என்று சொல்லிவிட்டு என் வண்டியை காண்பித்தேன். "என்ன அவசரம்.. கொஞ்சம் இருங்க" என்று சொல்லிவிட்டு "நீங்க வண்டி எடுத்து 6 மாசம் தான ஆச்சு......." என்று அருகிலிருந்த அவருக்கு தெரிந்த ஒருவருடன் உரையாட ஆரம்பித்தார்.

ஒரு 20 நிமிடங்கள் கழித்து என் வண்டி அருகே வந்தவர், என் வண்டியை புகைப்படம் எடுத்துக்கொண்டு நான் கொடுத்த காகிதத்தில் தன் கையெழுத்தை போட்டு கொடுத்துவிட்டு "நீங்க மேல ஆபீஸ்க்கு  போலாம்" என்றார். அவருக்கும் ஒரு நன்றியை செலுத்திவிட்டு வேகமாக மேலே வந்தேன்.

என்னை கீழே அனுப்பிய அலுவலரிடம் சென்று அந்த காகிதங்களை நீட்டிய பொழுது "இருங்க.. போட்டோ வரட்டும்" என்றார். ஒரு 10 நிமிடங்களை தாண்டியும் புகைப்படம் எடுத்தவர் வரவில்லை. நான் நேராக அந்த அலுவலரிடம் சென்று "எவ்வளவு நேரம் ஆகும் மேடம்" என்றேன். அவரோ "அவங்கள போயி  பாருங்க" என்று நான் முதலில் பார்த்த அந்த பெண் அலுவலரை காண்பித்தார்.

அவரிடம் சென்ற பொழுது, அவர் மற்றொரு பெண் அலுவலருடன் உரையாடிக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு அவர்கள் உரையாடலை தொடர்ந்தார்.

அலுவலர் 1: ஹ்ம்ம்' சொல்லுங்க
அலுவலர் 2: இப்போ Sq Ft ரேட் எல்லாம் கம்மி தான். அவ்வளவு வராது. நான் எங்க Er கிட்ட பேசிட்டு சொல்லுறேன்....

அவர்கள் உரையாடல் தொடரவே, சற்று தூரத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தேன். 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் உரையாடல் முடியவே, நான் மீண்டும் அலுவலரிடம் சென்று என் காகிதங்களை காட்டினேன். அதை பார்த்துவிட்டு "நீங்க அவங்க கிட்ட குடுங்க" என்று தன்னுடன் உரையாடி கொண்டிருந்த அந்த மற்றொரு அலுவலரை காண்பித்தார். அவரோ வேறொரு பெண் அலுவலரிடம் அதே கதையை பேசிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து தன் இருக்கைக்கு வந்தார்.

அவரிடம் சென்று என் பாலிசி காகிதங்களை நீட்டினேன். வாங்கி வைத்து கொண்டு என்னை அமருமாறு சொன்னார். அங்கு இருக்கை இல்லாததால் வேறு ஒரு இடத்தில சென்று அமர்ந்து அவர் என்ன செய்கிறார் என்று பார்த்து கொண்டிருந்தேன் .

என் பாலிசி காகிதங்களை வாங்கி வைத்தவர், ஒரு சில நிமிட போராட்டத்திற்கு பின் தன் மூக்கு கண்ணாடியை தேடி கண்டுபிடித்து என் காகிதங்களில் இருந்த தகவல்களை தன் கணனியில் பதிவு செய்ய ஆரம்பித்தார். இடையில் நிறுத்திவிட்டு "விக்ரம் குமார், Driving Licence இருக்கா " என்று உரக்க கேட்டார். நான் எழுந்து சென்று "இருக்குங்க மேடம்" என்று கூறி என் Driving Licenceஐ  காண்பித்தேன்.

ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு என் காகிதங்களை திருப்பி தந்துவிட்டு, தன் பக்கத்துக்கு மேஜையை காண்பித்து "அவர் கிட்ட குடுங்க" என்றார். நான் நம்ம  வடிவேலு மாதிரி "இன்னும் எத்தன பேரு....." என்று நினைத்துக் கொண்டு அவரிடம் சென்றேன்.

அனைத்து காகிதங்களையும் வாங்கி பார்த்து விட்டு தன் கணனியை தேடி "720 ரூபாய் குடுங்க" என்றார். நானும் வேகமாக 750 ரூபாயை எடுத்து கொடுதேன் (சில்லறை இல்லாத காரணம் தான்.. அவர் பக்கத்தில் இருந்த பெட்டியில் 10 ரூபாய் கட்டு  2 இருந்த தைரியம்  வேறு) 700 ரூபாயை வாங்கிக்கொண்டு "20 ரூபாய் குடுங்க" என்றவரிடம் "சில்லறை இல்ல சார்" என்றேன். சற்றும் யோசிக்காமல் "வாங்கிட்டு வந்திடுங்க" என்றார் பாருங்களேன்.... நான் சற்று திகைத்து தான் போய்விட்டேன்.

நேரம் 12 மணியை தொட்டுவிட்டது. நான் வேகமாக கீழே சென்று சில்லறை வாங்க கடையை தேடினேன். கண்ணில் ஒரு bakery தென்பட்டது. நேராக சென்று குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துவிட்டு அப்படியே சில்லறை மாற்றிக்கொண்டு வந்தேன்.

நேராக அலுவலரிடம் சென்று 20 ரூபாயை கொடுத்தேன் . அதை வாங்கிக்கொண்டு ரசீதும் என் காகிதங்களையும் கொடுத்து மற்றொரு அலுவலரிடம் என்னை அனுப்பினார். 5 நிமிட காத்திருக்குப்பின் என்னுடைய புதிய பாலிசி ஆவணங்களை பெற்றுக்கொண்டு மிக பெரிய நன்றியை தெரிவித்துவிட்டு சற்றே சோர்வாக என் வண்டியை நோக்கி நடந்தேன்.

Monday, January 30, 2012

படித்ததில் பிடித்தது

நன்றி.. திரு.இயகோகா சுப்பிரமணியம்

ஒன்றான பாரதத்தை ஒருங்கிணைந்து துண்டாடி
உடன்பிறப்பை வெறுப்பேற்றி பகையாக்கி வைத்ததுவும்;
சென்றோடி ஒதுங்கிவிட்ட சுயநல பரங்கியர்கள் 
சூழ்ச்சியால் இந்தியரின் மனவளத்தை சிதைத்ததுவும்;
வென்றாள வந்தவர்கள் தின்றதை தீர்த்தத்தை
வெடிவைத்தும் பொடிவைத்தும் மக்களிடம் மறைத்ததுவும்;
மன்றாடி மாமனிதர் பெற்றதை பாராளு
மன்றத்தில் கண்மூடி குழிதோண்டி புதைத்ததுவும்;

ஊழல் ஒழியவென்று உண்ணாது தவமிருந்து 
உயர்ந்தவரை பொய்யரென்று ஊடகத்தில் உரைத்ததுவும்;
சூழல் கெடுமளவு மண்வளத்தில் நீர்நிலையில் 
அந்நியரின் விஷவிதைகள் நஞ்சுமழை பொழிந்ததுவும்;
பூமலையும் தேன்தினையும் பொங்கிவரும் வனவழகைப்
பழாக்கித் தினம்வெட்டி பறவைகளை அழித்ததுவும்;
நாவளையும் என்பதனால் நாள்தோறும் சொல்மாற்றி
நம்பினோர் வாழ்க்கையிலே வஞ்சகம் இழைத்ததுவும்;

இத்தாலி வேண்டாம் இவன்துனையும் வேண்டாம்
இல்லறமே தவறென்று எவருடனும் கூடுவதும்;
கொத்தோடு குலையாடக் கூடியே வாழ்ந்தவர்கள்
தெறித்தோடித் தனிமையிலே தினம்நொந்து வாடுவதும்;
பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவென்று
 மதுவிற்று அரசாங்கம் வருமானம் தேடுவதும்;
இத்தோடு போதுமென இளமைதான் சதமென்று
தப்பான ஆட்டங்கள் தலைகனத்து ஆடுவதும்;

ஆணோடு ஆண்சேரும் ஒவ்வாத உறவுதனை 
என்னுரிமை எனகூறி போர்க்கொடிகள் ஏந்துவதும்;
ஊனோடு கலந்துவிட்ட உன்னத பண்புகளை
உதவாது எனவுரைத்து எதிர்திசையில் நீந்துவதும்;
வானோடு வளர்ந்திருந்த முன்னோரின் வார்த்தைகளை
வீணென்று புறந்தள்ளி வீணருடன் சேர்ந்ததுவும்;
ஊரோடு பலர்சேர்ந்து உச்சத்தில் கூச்சலிட்டால்
கொலைகாரன் தியாகியெனக் கூசாமல் ஏற்பதுவும்;

கோடிகளில் கொள்ளையிட்டு சிறைசென்று மாண்புகெட்டும்
குற்றமே இல்லையெனக் குணவானாய் நடிப்பதுவும்;
தேடியதில் கிடைத்ததெனத் தோண்டியதை வழித்தெடுத்து
தேசத்தில் கனிமங்கள் திருட்டிலே வடிப்பதுவும்;
ஊர்ச்சொத்து சிவன்சொத்து என்றறிந்தும் விற்றுப்பின்
ஊருக்கே நீதிசொல்லும் தலைவனென படிந்ததுவும்;
ஒர்ச்சத்தும் இல்லாத அயல்நாட்டு தின்பண்டம்
உயர்ந்ததென வீம்புக்கு உண்டு உடல் கெடுத்ததுவும்;

இன்றோடு ஒழியட்டும், இனியேனும் விடியட்டும்
இளைஞர்கள் எல்லார்க்கும் புதுஞானம் எழவேண்டும்;
ஒன்றான எம்தேசம் ஒருகுரலில் ஆணையிட்டால்
இங்குள்ள துரோகிகள் இடுப்பொடிந்து விழவேண்டும்;
சென்றாண்டு நைல்நதியில் மல்லிகை பூவெடித்த
சீவனுள்ள போராட்டம் மாற்றங்கள் தரவேண்டும்;
குன்றாண்டு தமிழ்ஆளும் குமரனவன் கருணைமனம்
எல்லோரும் நலம்வாழ புத்தாண்டில் துணைவேண்டும்

                                                                       - இயகோகா சுப்பிரமணியம்

Monday, January 16, 2012

ஈஷா யோகா.. என் பார்வையில்..

யோகா செய்ய வேண்டும் என்ற என் முடிவிற்கு பின் மிக பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உடற்பயிர்ச்சி கூடத்திற்கு சென்று உடலை வருத்தி செய்யும் செயல்களில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை அதற்கான உடல் வாகுவும் எனக்கில்லை.

யோகா சென்று அமைதி தேட வேண்டுமென்ற அவசியம் எனகிருந்ததில்லை (என் மனைவிக்கும் மகனுக்கும் நன்றி), இருந்தாலும் என் தாய் வழி தூரத்து உறவான என் தாத்தா (ஒரு சித்தா வைத்தியர்) எனக்கு சிறு வயதில் சொன்னதெல்லாம் அவர் யோகா செய்ததினால் அடைந்த பலன்கள் மட்டும் தான். அன்று முதல் என்னை அறியாமல் எனக்குள் யோகா கற்க வேண்டுமென்ற ஓர் உந்துதல் இருந்துகொண்டே இருந்தது.

நான் சென்னையில் இருந்த பொழுது எனக்கு இருந்த மிக பெரிய சவாலே என் குடும்பத்தை பிரிந்திருப்பது தான். அது நிச்சயம் மனதளவில் என்னுள் ஒரு பாதிப்பை உண்டாக்கவே செய்தது. நான் கோவையில் வேலை கிடைத்து திரும்பி வந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சியும் சற்று அதிகமானதாகவே இருந்தது. இந்த நிகழ்வுகள் என்னை சற்று சிந்திக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
 
வருத்தமும் மகிழ்ச்சியும் இந்த இரு தருணங்களில் அளவு கடந்தே இருந்தது. மனதளவில் எனக்கு சமநிலை இல்லாதது தெளிவாக புரிந்தது. யோகா கற்க இதை விட சிறந்த தருணம் எனக்கு மீண்டும் அமையுமா என்று எனக்கு தெரியாது ஆனால் அதை ஆரம்ப அளவில் மட்டுமாவது கற்பது என்று முடிவு செய்தேன்.

என் வீட்டிற்க்கு அருகில் இருந்த ஒரு யோகா வகுப்பில் இணைந்து என் முடிவை செயல் படுத்தினேன். ஒரு மாதம் காலை அவர்கள் சொல்லிகொடுத்த எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தேன். ஒரு ஞாயிற்றுகிழமை தீக்ஷை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கற்று கொடுத்த யோகாவை தினமும் செய்து வந்தேன்.

என் தேடல் முற்றிலும் வேறாக இருந்தது. அந்த யோகா என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. நிச்சயம் அவர்களையோ அவர்கள் கற்று தந்த யோகா கலையோ நான் தவறாக சொல்ல மாட்டேன். என் தேடலுக்கு அது விடை கொடுக்க முடியவில்லை அல்லது என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் எங்கள் company நிறுவனர் சதீஷ் சரவணன் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்த பொழுது அவர் என் யோகா பற்றி கேட்டுக்கொண்டு நான் தொடர்ந்து என்னுடைய சாதனாக்களை செய்ய வேண்டுமென்று சொன்னார். அவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்களில் என் தேடலுக்கான விடைகளை அவர் அறிந்து வைத்திருப்பதை எண்ணி ஆச்சர்யம் அடைந்தேன். என்னதான் விடைகள் அவருக்கு தெரிந்திருந்தாலும் அதை நானல்லவா உணர வேண்டும்?? அதை தானே தேடிகொண்டிருந்தேன்???

அவரிடம் கேட்டுகொண்டு ஈஷா நடத்திய ஆரம்ப வகுப்பான 7 நாள் தியான வகுப்பில் இணைந்தேன். அந்த 7 நாட்களையும் விவரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தாலும் இந்த பக்கம் யாரையும் தவறாக திசை திருப்ப கூடாது என்பதற்காக என் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.


என் நண்பர்கள் சொல்லுவது உண்மை தான்.. மொத்தம் 30 நிமிடங்கள் செய்யும் சாதனாவிற்கு 7 நாட்கள் தேவை இல்லைதான். நாம் வாழ்வது வீட்டில் தானே, அஸ்திவாரம் எதற்கு?? எனக்கு அந்த 7 நாட்கள் எனக்குள் ஒரு அஸ்திவாரம் கட்டிய உணர்வுதான் உள்ளது. சத்குரு உரைகளும், நான் அங்கு செய்த மனதளவிலான பயிற்சிகளும் நிச்சயம் நான் செய்யும் சாதனாவிற்கு ஒரு பலமான அஸ்திவாரமே. அது தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து. வெறும் சாதனா செய்வது என்ன தரும் என்பதை என் முந்தைய யோகா வகுப்பில் கற்றுகொண்டேன். அது எனக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்தேன்.


தொடர்ந்து சாதனா செய்து வந்தேன். என்னுள் என்னால் உணரக்கூடிய மாற்றங்களை கண்டு வியந்தேன். தொடர்ந்து தேட தொடங்கினேன், ஆன்மிகம் என்ற வார்த்தையின் உட்பொருளை உணர தொடங்கினேன். சுகம் துக்கம் இந்த இரண்டும் என்னவென்று அறிய தொடங்கினேன்...


வீட்டை துறந்து காடு போய் துறவறம் புரிவது ஆன்மிகம் என்றால் அதை செய்வது தான் இந்த உலகில் மிக எளிது. அனால் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு ஆன்மிகம் என்பதை உணர்வது எவ்வளவு ஒரு உயர்ந்த நிலை என்பதை உணர தொடங்கினேன்..


நான் வெளியில் தேடி திரிந்த விடைகள் எல்லாம் எனக்குளே இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன். என்னை என்னுள்ளே தேட கற்றுக்கொண்டேன்...


நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அனால் என் வாழ்கை நான் தேடிய வழியில் செல்கிறது என்பது மட்டும் நிச்சயம்... 
 

பி.கு. இதில் குறிப்பிட பட்டவை அனைத்தும் என்னுடைய உணர்வுகளே.. இது யாரையும் புண்படுத்தவோ வழி நடத்தவோ எழுதப்பட்டவை அல்ல.

Friday, August 19, 2011

ஊழலுக்கு நான் எதிரி

இன்று ஊழலுக்கு எதிர்ப்பாக நடந்து கொண்டிருக்கும் மிக பெரிய போராட்டம் இந்திய மக்களை நிச்சயம் விழிப்படைய வைத்திருக்கிறது. ஊழலுக்கு எதிர்ப்பான இந்த விழிப்புணர்வு உலகளவில் ஒரு மாற்றத்தை தரும் என்று நான் நம்புகிறேன்..

ஒரு சாதாரணமான சாமானிய குடி மகனாக நான் என் உணர்வுகளை தெரிவிக்க இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி சிவானந்த காலனியில் நடக்கும் பேரணியில் பங்கேற்கிறேன்..

 நான் வெறும் சிறு துளி தான்.. ஊழல் என்ற வியாதியை ஒட்டு மொத்தமாக அழித்துவிட துடிக்கும் என்னை போல் எத்தனையோ சிறு துளிகள் இன்று ஒன்று சேர்ந்து பெரும் கடலாக மாறியுள்ளது என் தாய் திரு நாட்டிற்க்கு நிச்சயம் நன்மையாய் முடியும்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், எனக்கு தோன்றிய சில கேள்விகளுக்கு யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....

1 . காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த ஒரு தமிழக கட்சியின் தலைவர் இன்று இந்தியர்களுக்காக நடக்கும் ஒரு உரிமை போராட்டதிற்கு மவுனம் சாதிப்பது ஏன்?

2 . மேற் சொன்ன அறபோராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்த ஒரு தொலைக்காட்சி கடந்த சில தினங்களாக நடக்கும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தையும் அதன் பின்னணியில் நடக்கும் அவலங்களையும் பெயரளவில் செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்டதேன்???

3 . இலங்கை தமிழர்களுக்காக பல விதத்தில் போராட்டம்  மற்றும் கண்டன நடவடிக்கைகள் செய்த தமிழ் திரையுலகம் இன்று சென்றதெங்கே???

4 . விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை மேடை போட்டு கண்டித்த கட்சிகள் இன்று எங்கே???

5 . இலங்கை அரசின் அடக்குமுறைகளை கண்டித்து கதறி துடித்தவர்கள் இன்று இந்திய அரசின் செயல்களை கண்டு மௌனம் சாதிப்பது ஏன்???

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நீங்கள் கண்டித்து வெகுண்டெழுந்த போது அதை கண்டு பெருமை கொண்ட இந்த தமிழன் இன்று ஒரு இந்தியனாய் நீங்கள் செத்துவிட்டதை எண்ணி மனம் குமுறுகிறேன்.

நதிநீர் இணைபிற்காக உண்ணாவிரதம் இருந்த என் அபிமானத்திற்கு உரியவர்களே....  அதைவிடவும் முக்கியமான ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் உங்களை காண முடியவில்லையே??? நீங்கள் திடீர் ஊமைகளாகிபோன ரகசியம் என்ன?????  

என் மானசீக தலைவன், 74 வயது இளைஞன், நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்த நாட்டின் இரண்டாவது தேச தந்தை, வாழும் மகாத்மா... ஊழலற்ற இந்தியாவின் முதல் அடிக்கல்லை நட்டு வைக்க போராடும் அண்ணா ஹசாரே வின் போராட்டம் வெற்றி பெற வணங்கி என்னை ஒரு சிறு துளியாய் இணைத்துக்கொள்கிறேன்.

Wednesday, August 3, 2011

கணேசன்... பார்த்த சலித்த பழைய மனிதன்

போடிநாயக்கனூர் கணேசன் என்ற திரை காவியத்தை (?) சென்ற வார இறுதியில் பார்த்துவிட்டு திரை அரங்கத்தை விட்டு வரும் பொழுது என் மனதில் ஒரே கேள்வி தான் நின்றது...
இந்த திரைபடத்தில் வித்தியாசமான முயற்சி ஏதேனும் இருந்ததா?

1. நாயகன் சட்ட விரோதமான செயல்களில் அதற்காகவே பிறந்தது போல் மிக தேர்ச்சியுடன் ஈடுபடுகிறான்...
2 . அவன் மாறிவிட மாட்டானா?? என்று ஒரு தாய்குலம் திருப்தி வெங்கடாசலபதியிடம் வேண்டுகிறாள் (ஒரு ஆறுதல்... இது நாயகனின் தாய் இல்லை )
3 . நாயகனை வில்லன் தன் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான் (எதிர்பார்த்தது போலவே இதற்கு ஒரு பின் கதை உள்ளது..)
4 . தனக்கு விருப்பமே இல்லாமல் செய்துகொடுத்த சத்தியத்திற்காக நாயகன் வில்லனுடன் இருக்கிறான் (விரும்பிவிட்டால் வில்லனாகிவிடுவானே...)
5 . வழக்கம் போல் நாயகியின் உணர்ச்சி மிகுந்த வசனத்தில் பொங்கியெழும் நாயகன் வில்லனை அழித்து நல்லவனாகிறான்... (வித்தியாசத்திற்கு பாவம் ஒரு மன நோயாளியை வேறு கொன்றிருக்கிறார்கள்)
6 . எதற்காக வில்லனை பன்றி மேய்க்க விட்டார்கள் என்று தான் புரியவில்லை!!!

அட.. என்ன ஒரு கதை.. இதை வடிக்க இயக்குனர் எத்தனை மெனு கெட்டிருக்க வேண்டும்??? அதனால் தானோ என்னவோ தானே நாயகனாக முடிவெடுத்து விட்டார்...


அரங்கத்தை விட்டு வரும் பொழுது இரு நண்பர்கள் பேசிகொண்டது என் மனதில் அலை மோதியது...

நண்பன் 1 : டேய்.. நான் அப்போவே சொன்னேன் வேண்டாம்னு.. கேட்டியா???
நண்பன் 2 : வேற படத்துக்கு டிக்கெட் கெடைகளையே டா..
நண்பன் 1 : இந்த படத்த பாத்ததுக்கு 3 மணி நேரம் வீட்ல தூங்கிருக்கலாம்..
நண்பன் 2 : செரி வா.. ஒரு தம் போடலாம்.. அப்போ தான் தல வலி தீரும்....