Wednesday, August 3, 2011

கணேசன்... பார்த்த சலித்த பழைய மனிதன்

போடிநாயக்கனூர் கணேசன் என்ற திரை காவியத்தை (?) சென்ற வார இறுதியில் பார்த்துவிட்டு திரை அரங்கத்தை விட்டு வரும் பொழுது என் மனதில் ஒரே கேள்வி தான் நின்றது...
இந்த திரைபடத்தில் வித்தியாசமான முயற்சி ஏதேனும் இருந்ததா?

1. நாயகன் சட்ட விரோதமான செயல்களில் அதற்காகவே பிறந்தது போல் மிக தேர்ச்சியுடன் ஈடுபடுகிறான்...
2 . அவன் மாறிவிட மாட்டானா?? என்று ஒரு தாய்குலம் திருப்தி வெங்கடாசலபதியிடம் வேண்டுகிறாள் (ஒரு ஆறுதல்... இது நாயகனின் தாய் இல்லை )
3 . நாயகனை வில்லன் தன் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான் (எதிர்பார்த்தது போலவே இதற்கு ஒரு பின் கதை உள்ளது..)
4 . தனக்கு விருப்பமே இல்லாமல் செய்துகொடுத்த சத்தியத்திற்காக நாயகன் வில்லனுடன் இருக்கிறான் (விரும்பிவிட்டால் வில்லனாகிவிடுவானே...)
5 . வழக்கம் போல் நாயகியின் உணர்ச்சி மிகுந்த வசனத்தில் பொங்கியெழும் நாயகன் வில்லனை அழித்து நல்லவனாகிறான்... (வித்தியாசத்திற்கு பாவம் ஒரு மன நோயாளியை வேறு கொன்றிருக்கிறார்கள்)
6 . எதற்காக வில்லனை பன்றி மேய்க்க விட்டார்கள் என்று தான் புரியவில்லை!!!

அட.. என்ன ஒரு கதை.. இதை வடிக்க இயக்குனர் எத்தனை மெனு கெட்டிருக்க வேண்டும்??? அதனால் தானோ என்னவோ தானே நாயகனாக முடிவெடுத்து விட்டார்...


அரங்கத்தை விட்டு வரும் பொழுது இரு நண்பர்கள் பேசிகொண்டது என் மனதில் அலை மோதியது...

நண்பன் 1 : டேய்.. நான் அப்போவே சொன்னேன் வேண்டாம்னு.. கேட்டியா???
நண்பன் 2 : வேற படத்துக்கு டிக்கெட் கெடைகளையே டா..
நண்பன் 1 : இந்த படத்த பாத்ததுக்கு 3 மணி நேரம் வீட்ல தூங்கிருக்கலாம்..
நண்பன் 2 : செரி வா.. ஒரு தம் போடலாம்.. அப்போ தான் தல வலி தீரும்....

No comments:

Post a Comment