யோகா செய்ய வேண்டும் என்ற என் முடிவிற்கு பின் மிக பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உடற்பயிர்ச்சி கூடத்திற்கு சென்று உடலை வருத்தி செய்யும் செயல்களில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை அதற்கான உடல் வாகுவும் எனக்கில்லை.
யோகா சென்று அமைதி தேட வேண்டுமென்ற அவசியம் எனகிருந்ததில்லை (என் மனைவிக்கும் மகனுக்கும் நன்றி), இருந்தாலும் என் தாய் வழி தூரத்து உறவான என் தாத்தா (ஒரு சித்தா வைத்தியர்) எனக்கு சிறு வயதில் சொன்னதெல்லாம் அவர் யோகா செய்ததினால் அடைந்த பலன்கள் மட்டும் தான். அன்று முதல் என்னை அறியாமல் எனக்குள் யோகா கற்க வேண்டுமென்ற ஓர் உந்துதல் இருந்துகொண்டே இருந்தது.
நான் சென்னையில் இருந்த பொழுது எனக்கு இருந்த மிக பெரிய சவாலே என் குடும்பத்தை பிரிந்திருப்பது தான். அது நிச்சயம் மனதளவில் என்னுள் ஒரு பாதிப்பை உண்டாக்கவே செய்தது. நான் கோவையில் வேலை கிடைத்து திரும்பி வந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சியும் சற்று அதிகமானதாகவே இருந்தது. இந்த நிகழ்வுகள் என்னை சற்று சிந்திக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
வருத்தமும் மகிழ்ச்சியும் இந்த இரு தருணங்களில் அளவு கடந்தே இருந்தது. மனதளவில் எனக்கு சமநிலை இல்லாதது தெளிவாக புரிந்தது. யோகா கற்க இதை விட சிறந்த தருணம் எனக்கு மீண்டும் அமையுமா என்று எனக்கு தெரியாது ஆனால் அதை ஆரம்ப அளவில் மட்டுமாவது கற்பது என்று முடிவு செய்தேன்.
என் வீட்டிற்க்கு அருகில் இருந்த ஒரு யோகா வகுப்பில் இணைந்து என் முடிவை செயல் படுத்தினேன். ஒரு மாதம் காலை அவர்கள் சொல்லிகொடுத்த எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தேன். ஒரு ஞாயிற்றுகிழமை தீக்ஷை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கற்று கொடுத்த யோகாவை தினமும் செய்து வந்தேன்.
என் தேடல் முற்றிலும் வேறாக இருந்தது. அந்த யோகா என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. நிச்சயம் அவர்களையோ அவர்கள் கற்று தந்த யோகா கலையோ நான் தவறாக சொல்ல மாட்டேன். என் தேடலுக்கு அது விடை கொடுக்க முடியவில்லை அல்லது என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நாள் எங்கள் company நிறுவனர் சதீஷ் சரவணன் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்த பொழுது அவர் என் யோகா பற்றி கேட்டுக்கொண்டு நான் தொடர்ந்து என்னுடைய சாதனாக்களை செய்ய வேண்டுமென்று சொன்னார். அவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்களில் என் தேடலுக்கான விடைகளை அவர் அறிந்து வைத்திருப்பதை எண்ணி ஆச்சர்யம் அடைந்தேன். என்னதான் விடைகள் அவருக்கு தெரிந்திருந்தாலும் அதை நானல்லவா உணர வேண்டும்?? அதை தானே தேடிகொண்டிருந்தேன்???
அவரிடம் கேட்டுகொண்டு ஈஷா நடத்திய ஆரம்ப வகுப்பான 7 நாள் தியான வகுப்பில் இணைந்தேன். அந்த 7 நாட்களையும் விவரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தாலும் இந்த பக்கம் யாரையும் தவறாக திசை திருப்ப கூடாது என்பதற்காக என் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
என் நண்பர்கள் சொல்லுவது உண்மை தான்.. மொத்தம் 30 நிமிடங்கள் செய்யும் சாதனாவிற்கு 7 நாட்கள் தேவை இல்லைதான். நாம் வாழ்வது வீட்டில் தானே, அஸ்திவாரம் எதற்கு?? எனக்கு அந்த 7 நாட்கள் எனக்குள் ஒரு அஸ்திவாரம் கட்டிய உணர்வுதான் உள்ளது. சத்குரு உரைகளும், நான் அங்கு செய்த மனதளவிலான பயிற்சிகளும் நிச்சயம் நான் செய்யும் சாதனாவிற்கு ஒரு பலமான அஸ்திவாரமே. அது தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து. வெறும் சாதனா செய்வது என்ன தரும் என்பதை என் முந்தைய யோகா வகுப்பில் கற்றுகொண்டேன். அது எனக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்தேன்.
தொடர்ந்து சாதனா செய்து வந்தேன். என்னுள் என்னால் உணரக்கூடிய மாற்றங்களை கண்டு வியந்தேன். தொடர்ந்து தேட தொடங்கினேன், ஆன்மிகம் என்ற வார்த்தையின் உட்பொருளை உணர தொடங்கினேன். சுகம் துக்கம் இந்த இரண்டும் என்னவென்று அறிய தொடங்கினேன்...
வீட்டை துறந்து காடு போய் துறவறம் புரிவது ஆன்மிகம் என்றால் அதை செய்வது தான் இந்த உலகில் மிக எளிது. அனால் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு ஆன்மிகம் என்பதை உணர்வது எவ்வளவு ஒரு உயர்ந்த நிலை என்பதை உணர தொடங்கினேன்..
நான் வெளியில் தேடி திரிந்த விடைகள் எல்லாம் எனக்குளே இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன். என்னை என்னுள்ளே தேட கற்றுக்கொண்டேன்...
நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அனால் என் வாழ்கை நான் தேடிய வழியில் செல்கிறது என்பது மட்டும் நிச்சயம்...
பி.கு. இதில் குறிப்பிட பட்டவை அனைத்தும் என்னுடைய உணர்வுகளே.. இது யாரையும் புண்படுத்தவோ வழி நடத்தவோ எழுதப்பட்டவை அல்ல.
யோகா சென்று அமைதி தேட வேண்டுமென்ற அவசியம் எனகிருந்ததில்லை (என் மனைவிக்கும் மகனுக்கும் நன்றி), இருந்தாலும் என் தாய் வழி தூரத்து உறவான என் தாத்தா (ஒரு சித்தா வைத்தியர்) எனக்கு சிறு வயதில் சொன்னதெல்லாம் அவர் யோகா செய்ததினால் அடைந்த பலன்கள் மட்டும் தான். அன்று முதல் என்னை அறியாமல் எனக்குள் யோகா கற்க வேண்டுமென்ற ஓர் உந்துதல் இருந்துகொண்டே இருந்தது.
நான் சென்னையில் இருந்த பொழுது எனக்கு இருந்த மிக பெரிய சவாலே என் குடும்பத்தை பிரிந்திருப்பது தான். அது நிச்சயம் மனதளவில் என்னுள் ஒரு பாதிப்பை உண்டாக்கவே செய்தது. நான் கோவையில் வேலை கிடைத்து திரும்பி வந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சியும் சற்று அதிகமானதாகவே இருந்தது. இந்த நிகழ்வுகள் என்னை சற்று சிந்திக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
வருத்தமும் மகிழ்ச்சியும் இந்த இரு தருணங்களில் அளவு கடந்தே இருந்தது. மனதளவில் எனக்கு சமநிலை இல்லாதது தெளிவாக புரிந்தது. யோகா கற்க இதை விட சிறந்த தருணம் எனக்கு மீண்டும் அமையுமா என்று எனக்கு தெரியாது ஆனால் அதை ஆரம்ப அளவில் மட்டுமாவது கற்பது என்று முடிவு செய்தேன்.
என் வீட்டிற்க்கு அருகில் இருந்த ஒரு யோகா வகுப்பில் இணைந்து என் முடிவை செயல் படுத்தினேன். ஒரு மாதம் காலை அவர்கள் சொல்லிகொடுத்த எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தேன். ஒரு ஞாயிற்றுகிழமை தீக்ஷை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கற்று கொடுத்த யோகாவை தினமும் செய்து வந்தேன்.
என் தேடல் முற்றிலும் வேறாக இருந்தது. அந்த யோகா என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. நிச்சயம் அவர்களையோ அவர்கள் கற்று தந்த யோகா கலையோ நான் தவறாக சொல்ல மாட்டேன். என் தேடலுக்கு அது விடை கொடுக்க முடியவில்லை அல்லது என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நாள் எங்கள் company நிறுவனர் சதீஷ் சரவணன் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்த பொழுது அவர் என் யோகா பற்றி கேட்டுக்கொண்டு நான் தொடர்ந்து என்னுடைய சாதனாக்களை செய்ய வேண்டுமென்று சொன்னார். அவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்களில் என் தேடலுக்கான விடைகளை அவர் அறிந்து வைத்திருப்பதை எண்ணி ஆச்சர்யம் அடைந்தேன். என்னதான் விடைகள் அவருக்கு தெரிந்திருந்தாலும் அதை நானல்லவா உணர வேண்டும்?? அதை தானே தேடிகொண்டிருந்தேன்???
அவரிடம் கேட்டுகொண்டு ஈஷா நடத்திய ஆரம்ப வகுப்பான 7 நாள் தியான வகுப்பில் இணைந்தேன். அந்த 7 நாட்களையும் விவரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தாலும் இந்த பக்கம் யாரையும் தவறாக திசை திருப்ப கூடாது என்பதற்காக என் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
என் நண்பர்கள் சொல்லுவது உண்மை தான்.. மொத்தம் 30 நிமிடங்கள் செய்யும் சாதனாவிற்கு 7 நாட்கள் தேவை இல்லைதான். நாம் வாழ்வது வீட்டில் தானே, அஸ்திவாரம் எதற்கு?? எனக்கு அந்த 7 நாட்கள் எனக்குள் ஒரு அஸ்திவாரம் கட்டிய உணர்வுதான் உள்ளது. சத்குரு உரைகளும், நான் அங்கு செய்த மனதளவிலான பயிற்சிகளும் நிச்சயம் நான் செய்யும் சாதனாவிற்கு ஒரு பலமான அஸ்திவாரமே. அது தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து. வெறும் சாதனா செய்வது என்ன தரும் என்பதை என் முந்தைய யோகா வகுப்பில் கற்றுகொண்டேன். அது எனக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்தேன்.
தொடர்ந்து சாதனா செய்து வந்தேன். என்னுள் என்னால் உணரக்கூடிய மாற்றங்களை கண்டு வியந்தேன். தொடர்ந்து தேட தொடங்கினேன், ஆன்மிகம் என்ற வார்த்தையின் உட்பொருளை உணர தொடங்கினேன். சுகம் துக்கம் இந்த இரண்டும் என்னவென்று அறிய தொடங்கினேன்...
வீட்டை துறந்து காடு போய் துறவறம் புரிவது ஆன்மிகம் என்றால் அதை செய்வது தான் இந்த உலகில் மிக எளிது. அனால் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு ஆன்மிகம் என்பதை உணர்வது எவ்வளவு ஒரு உயர்ந்த நிலை என்பதை உணர தொடங்கினேன்..
நான் வெளியில் தேடி திரிந்த விடைகள் எல்லாம் எனக்குளே இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன். என்னை என்னுள்ளே தேட கற்றுக்கொண்டேன்...
நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அனால் என் வாழ்கை நான் தேடிய வழியில் செல்கிறது என்பது மட்டும் நிச்சயம்...
பி.கு. இதில் குறிப்பிட பட்டவை அனைத்தும் என்னுடைய உணர்வுகளே.. இது யாரையும் புண்படுத்தவோ வழி நடத்தவோ எழுதப்பட்டவை அல்ல.
No comments:
Post a Comment